தூங்குத்தலை நடுகற்கள்:
நம் கோவில் திருவிழாக்களில் கிடாவெட்டு நடைபெறுவதை பார்த்திருப்போம். அக்காலத்தில் ஆநிரைகள்(ஆடு ,மாடு) பெருஞ்செல்வமாய் கருதப்பட்டது. ஆகவே அவ்வினங்கள் பெருகவும், நோய்நொடியின்றி இருக்கவும் பட்டியில் இருந்த ஆடு ஒன்றினை சாமிக்கு நேர்ந்துவிட்டு குறிப்பிட்ட நாளில் ஊரார் முன்னிலையில் கிடாவை வெட்டி நேர்த்திக்கடனை செலுத்துவர். இதே வழக்கம் பின்னாளில் தம்குடியினர் கொள்ளைநோயின்றி பல்கிபெருகவோ அல்லது தம்குடித்தலைவன், மன்னன் நோய்நொடியின்றி வாழவோ, படையில் வெற்றி பெறவோ, அல்லது வேறு எதன் பொருட்டோ தன்னைத்தானே பலியிட்டுக்கொள்ளும் மரபு நீண்டநாட்களாய் வழக்கில் இருந்துள்ளது. பெருந்தேவனாரின் பாரத வெண்பாவில் அரவானைப் பற்றி குறிப்புள்ளது. இதில் களப்பலி என அறியப்படும் பலி சடங்கைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த பலியை நடத்துபவர்கள் போர்களத்தில் வெற்றிப் பெறுவார்கள் என நம்பப்படுகிறது. இந்த சடங்கில், துணிவுமிக்க ஒரு போர்வீரன், தன் அணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தன் உயிரை காளி தேவிக்கு பலி கொடுத்து கொள்ள வேண்டும். இந்த சடங்கில் தன் உயிரை தியாகம் செய்து கொள்ள அரவான் முன் வந்தார். அரவான் கதை அநேகமாய் தென்னிந்திய சமூகங்களின் பலியிட்டுக்கொள்ளும் மரபினை சேர்ந்த கதையாக பின்னாளில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகவே தெரிகிறது!
இங்கே காணப்படும் தூங்குதலை என்பது வித்தியாசமான, அல்லது கொடூரமான ஒரு பலி!
தமிழகத்தில் இதுவரை இத்தகைய நடுகற்கள் 7மட்டுமே கிடைத்துள்ளது. அதில் நான்கு தொண்டை மண்டலத்திலும் ஒன்று தமிழக எல்லைப்பகுதியான கிருஷ்ணகிரியில் கன்னட எழுத்துப் பொறிப்புடனும் மற்றொன்று விருதுநகர் மாவட்டத்தில் மன்னார்கோட்டை எனும் ஊரில் காளிகோவில் அருகே கல்வெட்டாய் ஒன்று உள்ளது. இதில் வீரனின் புடைப்புச்சிற்பம் ஏதும் இல்லை,குலோத்துங்கசோழன் காலத்தில் கலியுக கண்டடி தன்மசெட்டி எனும் தலைவன் உடல்நலம் பெறவேண்டி வேலன் சீலப்புகழன் என்பவர் பலியிட்டுக்கொள்கிறார். மற்றொன்று சிவகங்கை மாவட்டம் மல்லல் ஊர் அருகேயுள்ளது இதுவும் குலோத்துங்கன் காலமே.இதிலும் புடைப்புச்சிற்பம் இல்லை குலோத்துங்கசோழ மூவரையன் எனும் அதிகாரியின் உடல்நலம் வேண்டி அம்பலக்கூத்தன் எனும் வீரன் தன்தலையை அரிந்து கொடுத்துள்ளான்.இவை அனைத்தும் சோழர் காலமே.
மணிமேகலையும் கலிங்கத்துப்பரணியும் இச்சாவை மேற்கொள்வோர் எவ்வாறு இறந்தனர் என வருணிக்கிறது.
"உலையா உள்ளமோடு உயிர்க்கடன் இறுத்தோர்
தலைதூங்கு நெடுமரம் தாழ்ந்துபுறம் சுற்றிப்
பீடிகை ஓங்கிய பெரும்பலி முன்றில்
காடுஅமர் செல்வி கழிபெருங் கோட்டமும்
உரை
அருந்தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும்"
காடமற்செல்வி எனப்படும் கொற்றவை முன்பு இறைவி நினைத்து வீரன் அமர்ந்திருப்பான். நல்ல தரமான மூங்கிலை மண்ணில் புதைத்து, அதன் மறுமுனையை நல்ல விசையுடன் இழுக்கும் வண்ணம் வளைத்து, அமர்ந்துள்ள வீரனின் கொண்டையில் நன்றாக இருக்கி கட்டிவிடுவர். நன்றாக மூங்கிலை வளைத்திருப்பதால் அது நல்லவிசையுடன் வீரனின் தலையை விடுவிக்க காத்திருக்கும். அவ்வீரன் கொற்றவையை அமர்ந்தவாறு வணங்கி வாளை கழுத்தில் இறக்கியதும், அந்த மூங்கில் தலையை தனியே பிய்த்து எறிந்து உயர்ந்து தூக்கிச்செல்லும். இதனாலேயே இந்த வகை பலிக்கு "தூங்குதலை","தூக்குத்தலை" எனும் பெயர் ஏற்பட்டது.
தமிழகத்தில் அவ்வாறு கிடைத்த வெகுசில சிற்பங்கள் கீழே
புகைப்படங்கள் உதவி:
Vels Kumaran S
Saravanan Raja
Saravana Manian P A
A.t. Mohanதூங்குத்தலை நடுகற்கள்:
நம் கோவில் திருவிழாக்களில் கிடாவெட்டு நடைபெறுவதை பார்த்திருப்போம். அக்காலத்தில் ஆநிரைகள்(ஆடு ,மாடு) பெருஞ்செல்வமாய் கருதப்பட்டது. ஆகவே அவ்வினங்கள் பெருகவும், நோய்நொடியின்றி இருக்கவும் பட்டியில் இருந்த ஆடு ஒன்றினை சாமிக்கு நேர்ந்துவிட்டு குறிப்பிட்ட நாளில் ஊரார் முன்னிலையில் கிடாவை வெட்டி நேர்த்திக்கடனை செலுத்துவர். இதே வழக்கம் பின்னாளில் தம்குடியினர் கொள்ளைநோயின்றி பல்கிபெருகவோ அல்லது தம்குடித்தலைவன், மன்னன் நோய்நொடியின்றி வாழவோ, படையில் வெற்றி பெறவோ, அல்லது வேறு எதன் பொருட்டோ தன்னைத்தானே பலியிட்டுக்கொள்ளும் மரபு நீண்டநாட்களாய் வழக்கில் இருந்துள்ளது. பெருந்தேவனாரின் பாரத வெண்பாவில் அரவானைப் பற்றி குறிப்புள்ளது. இதில் களப்பலி என அறியப்படும் பலி சடங்கைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த பலியை நடத்துபவர்கள் போர்களத்தில் வெற்றிப் பெறுவார்கள் என நம்பப்படுகிறது. இந்த சடங்கில், துணிவுமிக்க ஒரு போர்வீரன், தன் அணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தன் உயிரை காளி தேவிக்கு பலி கொடுத்து கொள்ள வேண்டும். இந்த சடங்கில் தன் உயிரை தியாகம் செய்து கொள்ள அரவான் முன் வந்தார். அரவான் கதை அநேகமாய் தென்னிந்திய சமூகங்களின் பலியிட்டுக்கொள்ளும் மரபினை சேர்ந்த கதையாக பின்னாளில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகவே தெரிகிறது!
இங்கே காணப்படும் தூங்குதலை என்பது வித்தியாசமான, அல்லது கொடூரமான ஒரு பலி!
தமிழகத்தில் இதுவரை இத்தகைய நடுகற்கள் 7மட்டுமே கிடைத்துள்ளது. அதில் நான்கு தொண்டை மண்டலத்திலும் ஒன்று தமிழக எல்லைப்பகுதியான கிருஷ்ணகிரியில் கன்னட எழுத்துப் பொறிப்புடனும் மற்றொன்று விருதுநகர் மாவட்டத்தில் மன்னார்கோட்டை எனும் ஊரில் காளிகோவில் அருகே கல்வெட்டாய் ஒன்று உள்ளது. இதில் வீரனின் புடைப்புச்சிற்பம் ஏதும் இல்லை,குலோத்துங்கசோழன் காலத்தில் கலியுக கண்டடி தன்மசெட்டி எனும் தலைவன் உடல்நலம் பெறவேண்டி வேலன் சீலப்புகழன் என்பவர் பலியிட்டுக்கொள்கிறார். மற்றொன்று சிவகங்கை மாவட்டம் மல்லல் ஊர் அருகேயுள்ளது இதுவும் குலோத்துங்கன் காலமே.இதிலும் புடைப்புச்சிற்பம் இல்லை குலோத்துங்கசோழ மூவரையன் எனும் அதிகாரியின் உடல்நலம் வேண்டி அம்பலக்கூத்தன் எனும் வீரன் தன்தலையை அரிந்து கொடுத்துள்ளான்.இவை அனைத்தும் சோழர் காலமே.
மணிமேகலையும் கலிங்கத்துப்பரணியும் இச்சாவை மேற்கொள்வோர் எவ்வாறு இறந்தனர் என வருணிக்கிறது.
"உலையா உள்ளமோடு உயிர்க்கடன் இறுத்தோர்
தலைதூங்கு நெடுமரம் தாழ்ந்துபுறம் சுற்றிப்
பீடிகை ஓங்கிய பெரும்பலி முன்றில்
காடுஅமர் செல்வி கழிபெருங் கோட்டமும்
உரை
அருந்தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும்"
காடமற்செல்வி எனப்படும் கொற்றவை முன்பு இறைவி நினைத்து வீரன் அமர்ந்திருப்பான். நல்ல தரமான மூங்கிலை மண்ணில் புதைத்து, அதன் மறுமுனையை நல்ல விசையுடன் இழுக்கும் வண்ணம் வளைத்து, அமர்ந்துள்ள வீரனின் கொண்டையில் நன்றாக இருக்கி கட்டிவிடுவர். நன்றாக மூங்கிலை வளைத்திருப்பதால் அது நல்லவிசையுடன் வீரனின் தலையை விடுவிக்க காத்திருக்கும். அவ்வீரன் கொற்றவையை அமர்ந்தவாறு வணங்கி வாளை கழுத்தில் இறக்கியதும், அந்த மூங்கில் தலையை தனியே பிய்த்து எறிந்து உயர்ந்து தூக்கிச்செல்லும். இதனாலேயே இந்த வகை பலிக்கு "தூங்குதலை","தூக்குத்தலை" எனும் பெயர் ஏற்பட்டது.
தமிழகத்தில் அவ்வாறு கிடைத்த வெகுசில சிற்பங்கள் கீழே
புகைப்படங்கள் உதவி:
Vels Kumaran S
Saravanan Raja
Saravana Manian P A
A.t. Mohan







No comments:
Post a Comment