Pages

Wednesday, 2 June 2021

நல்லாத்தூர்_நடுகல்

 #நல்லாத்தூர்_நடுகல்

#நல்லாத்தூர்


அமைப்பு:

இந்நடுகல், 180.5 செ.மீ உயரமும் 81.5 செ.மீ அகலமும் உடையது.

இடது காலை ஊன்றியும் வலது காலைப் பின்னோக்கியும் வைத்த நிலையில் உள்ள  வீரர் ஒருவர்,தம் இடது கையில் வில்லையும் வலது கையில் ஓங்கிய வாளையும் ஏந்தி உள்ளார். அரையாடை அணிந்த இந்த  வீரரின்  இடையில் வாள் உறை காணப்படுகிறது. இவரது இடது மார்பில் அம்பு தைத்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.

கல்லின் மேற்பகுதியில்   வட்டெழுத்தில் அமைந்த கல்வெட்டு சிதைந்த நிலையில் காணப்படுகிறது.


இதனை, இப்பகுதியில் பகைவருடனான பூசலில் மார்பில் அம்பு தைத்து மாண்டு போன ஒரு  வீரருக்கு எடுக்கப்பட்ட நடுகல்லாகக் கொள்ளலாம்.


கல்வெட்டு சிதைந்துள்ளதால் அரசரின் பெயர் ,பூசலின் காரணம், இறந்து பட்ட வீரரின் பெயர் மற்றும் 

ஊர் ஆகியவற்றை அறியக்கூடவில்லை.ஆயினும் நடுகல்லின் அமைப்பு, சிற்ப அமைதி,எழுத்து அமைதி கொண்டு இதனை பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகக் கொள்ளலாம்.


..............

கல்வெட்டு:


அரசன்:சிம்மவிஷ்ணு/பல்லவர்

காலம்:கி.பி.ஆறாம் நூற்றாண்டு


1.கோவி....

2.ரு பதினாண்காவது மே ல்...ரான் பட

3.எறிந்த ஞான்று பட்டார் கிப்பூர் கொம்...றா..

4.கணங்...

5.ல்.

...........


காலங்காலமாக வீரத்தைப் போற்றிப் பரவிய தமிழ் மரபுச் சங்கிலியின் இற்றுப்போய் அறுந்த  கண்ணிகளின் எச்சமாய் நிற்கிறதுஇந்த நடுகல்.


நன்றி:

Mahathma Selvapandiyan 

Arunkumar Pankaj 

Palani Samy.




முதல் பாண்டியர் நடுகல்

 முதல் பாண்டியர் நடுகல்: தமிழக வரலாற்றில் கோட்டை போர் தொடர்பான சில நடுகற்கள் காண கிடைக்கின்றன கோட்டைப்போர் நடுகற்கள்  இருவகைப்படும், கோட்டைய...