இந்த நடுகல் 9ம் நூற்றாண்டின் முற்பகுதியை சேர்ந்தது. இக்காலகட்டத்தில் தமிழகம் ஓர் குழப்பமான சூழ்நிலையில் இருந்தது. பல்லவரின் மேலான்மையிலிருந்து விலகி தனியாட்சி அமைக்க சோழர்கள் போராடி கொண்டிருந்தனர். பாண்டியர்கள் தனியே பாதி தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தனர். இந்நடுகல் கிடைத்த தகடூர் நாடு(தர்மபுரி பகுதி) அன்றைய தமிழகத்தின் எல்லைப்பகுதியாய் இருந்தது. ஆகவே பிற நாட்டினர் இப்பகுதியை அடிக்கடி தாக்குவதுண்டு. எனவே இவர்களுக்கு பெரும்பாலும் போரிட்டு தம் குடிகளை காப்பதிலேயே பொழுது கழிந்திருக்கும். இந்நடுகல் மதிகோன்பாளையம் எனும் ஊரில் கிடைத்தது. தற்போது தர்மபுரி அகழ்வைப்பகத்தில் உள்ளது. நடுகல்லில் கிடைத்த சிறு இடைவெளியில் மிகவும் சுருக்கமாகவும், சொல்ல வந்த விஷயத்தை தெளிவாகவும் கல்லில் செதுக்கியுள்ளனர். துரோகமும், விஸ்வாசமும் நிறைந்த கதை இது.
வாணர் குலத்தை சேர்ந்த அரிமிதையவாணராயன் எனும் அரசன் தகடூரைச்சுற்றியுள்ள கங்கநாடு, புறமலைநாடு, தாயனூர்நாடு, கோயினூர்நாடு எனும் பகுதிகளை ஆண்டு, அப்பகுதியில் ஒரு அதிகாரம் செலுத்தக்கூடிய மன்னராய் விளங்கினார். மற்றொரு எல்லைப்பகுதியை ஆண்ட நுளம்பர்குல மன்னர் ஒருவன், இவரது உறவினராய் இருக்கக்கூடும். அந்த நுளம்பன் இவரை உறவினர்போல் வஞ்சித்து துரோகமிழைத்து கொன்றுவிட்டு அவரது நாட்டையும் அபகரித்து விடுகிறார். அச்சமயம் அரிமிதையனின் மனைவி கர்ப்பமாய் வேறு இருந்திருக்கிறார். அரிமிதையரின் நம்பிக்கைக்குரிய சங்கரக்குட்டியார் என்பவர், தன் மன்னனின் மனைவியை காப்பாற்றி அவர் ஆண்பிள்ளை பெறும்வரை காவல்காத்து நின்றார். அதன்பின் மீண்டும் படையினை திரட்டி அந்த நுளம்பனை போரில் வெற்றி பெற்று நாட்டை கைப்பற்றுகிறார். அப்போரில் பெருவீரம் காட்டிய நாகந்தை சிறுகுட்டி என்பவர் மார்பில் அம்புதரித்து இறக்கிறார். அவருக்கு எழுப்பிய நடுகல்லே இது.
பேட்டை பராக்க்க்!!!!!

No comments:
Post a Comment