தூங்குதலை நடுகல்:
கர்நாடகாவிலுள்ள தூங்குதலை வகை நடுகல், நம் ஊரில் கிடைத்த இவ்வகை நடுகற்கள் யாவும். தன்னைதானே பலியிட்டுக்கொள்ளும் சுயபலிகற்களாகவே கிடைத்துள்ளது. ஆனால் கர்நாடகா மற்றும் அதன் எல்லைபகுதியான, நுளம்பர், கங்கர்கள் ஆண்ட தமிழகத்தின் சில எல்லைப்பகுதிளில், தூங்குதலை பலிஏற்கும் நாயகனை, மற்றொரு ஆள் வெட்டுவது போல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கீழ்க்கண்ட சிற்பம் மூன்று அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ளது. கீழடுக்கில் வீரன் போர்க்களத்தில் கலந்து கொள்வது போல் உள்ளது. அவ்வீரன் போரில் கலந்துகொள்ளும் வீரனாக அல்லது, அவனது படையணி கீழே காட்டப்பட்டுள்ளது! போரில் தம் அணி வெற்றிபெற, இரண்டாவது அடுக்கில் தம் தலையை கொடுக்க தயாராய் காட்டப்பட்டுள்ளான். அவனது தலை ஒரு மூங்கிலில் கட்டப்பட்டு, பத்மாசனத்தில் அமர்ந்துள்ளின். மற்றொரு வீரன் கொடுவாளில் வெட்ட கையை ஓங்கி வருகிறான். மேலடுக்கில் சிவலோகபதவி அடைந்துள்ளவாறு காட்டப்பட்டுள்ளான். லிங்கத்தின்மேல் சந்திரனும், சூரியனும் காட்டப்பட்டு, இவ்வீரனது இந்த உயிர்க்கொடை சந்திர, சூரியன் இருக்கும்வரை நிலைக்க இக்கல் நடப்பட்டதாய் காட்டப்பட்டுள்ளது!

No comments:
Post a Comment