Pages

Saturday, 25 July 2020

இனாம் குளத்தூர் நினைவுத்தூண்கள்

இனாம் குளத்தூர் நினைவுத்தூண்கள்:

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலின் முன்பு மூன்று தூண்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் தலைப்பகுதி வட்டவடிவில் செதுக்கப்பட்டு, நந்தியுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.மூன்று தூணிலும் உருவம் ஏதும் இல்லை, முதல் தூணில் உறத்தூர் கூற்றத்து கோநாட்டு நம்பி கிழத்தியார் தலையாய நாட்டின கல் என்றுள்ளது. தலைநாழிய நாட்டின கல் என்றால் இறக்க என பொருள். முதல் தூண் ஒரு பெண்ணுக்காய் எழுப்பப்பட்ட நினைவுத்தூண். இரண்டாம் தூண் கேரளாந்தக வளநாட்டு உறையூர் கூற்த்து களப்பூருடையான் என்பவருக்கு எழுப்பப்பட்ட நினைவுத்தூண். மூன்றாம் தூண் உறத்தூர் கூற்றத்து வடகோநாட்டை சேர்ந்தவருக்கு எழுப்பட்டது. கி.பி10 ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் இவை. இன்று லைப்பகுதி மட்டுமே வெளியே தெரிகிறது. எழுத்துப்பொறிப்புகள் உள்ளே புதைந்து விட்டது.


No comments:

Post a Comment

முதல் பாண்டியர் நடுகல்

 முதல் பாண்டியர் நடுகல்: தமிழக வரலாற்றில் கோட்டை போர் தொடர்பான சில நடுகற்கள் காண கிடைக்கின்றன கோட்டைப்போர் நடுகற்கள்  இருவகைப்படும், கோட்டைய...