Pages

Friday, 3 July 2020

புலிக்குத்தி நடுகற்கள்

புலிக்குத்தி நடுகற்கள்:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

இந்தியாவில் தொன்மை வாய்ந்த நடுகற்கள்  பாறைஓவிய பதிவாய் காணப்படுவது விலங்கினங்களுடன் பூசலிட்டு இறந்த வீரனை போற்றுவதாகவே உள்ளது. ஆயிரம்பசுக்களை தானம் செய்யும் புண்ணியம் போரில் மாண்ட ஒரு வீரனுக்கு கிடைக்கும் என ரிக் வேதம் கூட கூறுகிறது. அம்பாரிஷா எனும் மன்னன் ஒருபோரில் கலந்துகொள்வான். அப்போது அவன் சேவகன் சுதேவா அவன் கண்முன்னே மாண்டுபோவான். அவன் அழகிய விமானத்தில் சொர்க்கம் செல்வான். எத்தகு வேள்வியும் செய்யாத அவன் எவ்வாறு சொர்க்கம் சென்றான்? என இந்திரன் அம்பாரிஷா கேட்க நாட்டின் பொருட்டு ஒருவன் இறந்தால் அவன் வீரசுவர்க்கம் புகுவான் என இந்திரன் பதிலளிப்பான். போர் அல்லது பூசலிற்கு ஆயிரம்காரணம் இருக்கலாம். ஆனால் தன்பொருட்டு  சண்டையிடாமல் பிறருக்காய் மாண்டவனே தெய்வநிலைக்கு உயர்த்தப்படுகிறான். இது ஒருவகையில் இவ்வகை வீரர்களை ஊக்கப்படுத்துவதாகவும், மற்றவர்களை இவ்வாறுதயார்படுத்துவதாகவும் அமைகிறது!  நிறைய நடுகற்களில் மாண்ட வீரனை கௌரவப்படுத்த யானையை விட உயர்த்திக் காட்டுவதுண்டு.அதன் காரணம் அவ்வீரன் காட்டிய பெருவீரமே. இதே மான்பு நமது தெய்வச்சிலைகளில் காணலாம். எட்டுக்கைகாளி, பத்துக்கைதெய்வம் போன்றவர்களுக்கு அவ்வாறு வடிக்க காரணம் எதுவென யோசித்தால் ஒருதெய்வம் பலவித ஆயுதத்தை ஒரே நேரத்தில் உபயோககிக்கும் திறன் கொண்டதே என தான்நம்பியதை பிறருக்கு சுட்டவே என்ற காரணம் புலப்படும். இதையே தான் நடுகல்லிலும் வடித்துள்ளனர்.சங்க இலக்கியத்தில் புலிகுத்தி வீரன் குறித்து குறிப்புள்து. கபிலர் இருக்குவேளிரை "புலிக்கடிமால்" என கூறுவது நோக்கத்தக்கது. இலக்கியம் தவிர்த்து பல்லவர்காலத்தில் நமக்கு எழுத்துப்பொறிப்புடன் நடுகல் கிடைத்துள்ளது. முத்தரைய மன்னன் சுவரன் மாறன் கூட புலியைக்குத்தி கொன்று பெருவீரனாய் தனை காட்டிக்கொள்கிறார். அப்புலிக்கு ஒருநடுகல்லையும் தான் கொன்ற இடத்தில் எழுப்புகிறான்.பெரும்பாலும் இவ்வகை நடுகற்கள் குறிஞ்சி, முல்லை பகுதிகளில் கிடைக்கிறது. முல்லைவனமாய் இருந்து பிற்காலத்தில் விவசாயநிலமாக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பாய் கொங்கு பகுதிகளில் பிற்கால பாண்டியராட்சியிலிருந்து நாயக்கர் காலம் வரை நடுகல் அதிகம் கிடைக்கிறது. இதனை இன்றைய சமூக சூழலுடன் ஒப்பிடலாம். வனத்தைஒட்டிய குடியிருப்புகளில் இன்று ஆங்காங்கே சிறுத்தை, முதலிய வனவிலங்குகள் தென்படுவதைபோல அன்றும் தென்பட்டிருக்கும் அதன் சான்றே கீழ்க்காணும் நடுகற்கள்.







No comments:

Post a Comment

முதல் பாண்டியர் நடுகல்

 முதல் பாண்டியர் நடுகல்: தமிழக வரலாற்றில் கோட்டை போர் தொடர்பான சில நடுகற்கள் காண கிடைக்கின்றன கோட்டைப்போர் நடுகற்கள்  இருவகைப்படும், கோட்டைய...